’நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்’ - மிரட்டும் சுந்தர் சி-ன் பட்டாம்பூச்சி ட்ரெய்லர்

’நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்’ - மிரட்டும் சுந்தர் சி-ன் பட்டாம்பூச்சி ட்ரெய்லர்
’நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்’ - மிரட்டும் சுந்தர் சி-ன் பட்டாம்பூச்சி ட்ரெய்லர்

சுந்தர் சி - ஜெய் நடித்துள்ள ‘பட்டாம் பூச்சி’ பட்டாம்பூச்சி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 3’ கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினைத் தொடர்ந்து ‘பட்டாம்பூச்சி’, ‘தலைநகரம் 2‘, ‘வல்லான்’ உள்ளிட்ட படங்களில் சுநதர் சி நாயகனாக நடித்து வருகிறார். இதில், ‘பட்டாம் பூச்சி’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2’ படத்திற்குப்பிறகு, இப்படத்தில் ஜெய்- சுந்தர் சி மீண்டும் இணைந்துள்ளனர். பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் தயாரிக்க நவ்னீத் இசையமைத்துள்ளார். இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

‘மனுஷங்கள்ள ரெண்டு வகை. நல்லவன், கெட்டவன். நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான். கெட்டவனா இருந்தா?’ என்று டீசர் தொடங்கும்போதே சுந்தர் சியின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் வசனங்களும் தாடியை ஷேவ் செய்துவிட்டு செம்ம அழகாக வித்தியாசமாக காட்சியளிக்கும் ஜெய்யின் கெட்டப்பும் கவனம் ஈர்க்கின்றன. நிச்சயம் ஜெய்க்கு ஒரு கம்பேக் படமாக ’பட்டாம் பூச்சி’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ட்ரெய்லர் முழுக்க வித்தியாசனமான கெட்டப் ப்ளஸ் மிரட்டும் நடிப்பில் மனதில் சிறகடிக்கிறார் ஜெய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com