சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார்: ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உறுதி: பொன்ராம்

சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார்: ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உறுதி: பொன்ராம்
சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார்: ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உறுதி: பொன்ராம்

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் பொன்ராம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி என்று கூறியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வசூல் சாதனை செய்தது. சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர் வரிசைக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கொண்டு வந்தது. சிவகார்த்திகேயன் -சூரி-சத்யராஜ் கூட்டணி காமெடியில் அதகளப்படுத்தியிருப்பார்கள். பலருக்கும் ஃபேவரைட் படமாக இருக்கிறது. எத்தனைமுறை பார்த்தாலும் இப்படம் சலிப்பதில்லை என்று ரசிகர்கள் பெரும்பான்மையாக சொல்வதுண்டு. அப்படி நகைச்சுவையாலும் திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் பாடல்களாலும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த பத்திரிகையாளர் கேள்வியின்போது ”‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருமா?” என்றக் கேள்விக்கு ”'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது” என்றுக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி (maturity) ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com