பிப்ரவரி 7-ல் துவங்கும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

பிப்ரவரி 7-ல் துவங்கும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
பிப்ரவரி 7-ல் துவங்கும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கவுள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது. ஏற்கனவே, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com