‘நீங்க இல்லாம நான் இல்ல’ - சிம்பு உருக்கம்

‘நீங்க இல்லாம நான் இல்ல’ - சிம்பு உருக்கம்
‘நீங்க இல்லாம நான் இல்ல’ - சிம்பு உருக்கம்

’மாநாடு’ படத்தின் 100-வது நாளையொட்டி நடிகர் சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது. குறிப்பாக, திரைக்கதைக்காக பலரும் வெங்கட் பிரபுவை கொண்டாடுகிறார்கள். சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், ‘மாநாடு’ வெளியாகி இன்றுடன் 100 நாள் ஆவதையொட்டி சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படத்தின் 100 வது நாள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளார். வெங்கட் பிரபுவும் கடந்த இரண்டு நாட்களாக படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சிம்பு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்க இல்லாம நான் இல்லை’ என்று நெகிழ்ச்சியுடன் கையெடுத்து கும்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com