சிம்புவின் ‘மாநாடு’ பட வெளியீடு தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் அறிவிப்பு

சிம்புவின் ‘மாநாடு’ பட வெளியீடு தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் அறிவிப்பு
சிம்புவின் ‘மாநாடு’ பட வெளியீடு தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் அறிவிப்பு

நாளை சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’மாநாடு’ வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை படத்தில் இரண்டு பாடல்களும் கடந்த மாதம் ட்ரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அவரது ட்விட்டர் பக்கத்தில், ”நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் ’மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com