வெளியான முதல் நாளிலேயே சிம்புவின் ‘மாநாடு’ படம் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து சிம்புவின் ‘மாநாடு’ நேற்று வெளியானது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடத்தில் வெளியான படங்களில் முதல்நாளில் ‘அண்ணாத்த’ 34 கோடி ரூபாயும், ‘மாஸ்டர்’ 25 கோடி ரூபாயும், ’கர்ணன்’ 10 கோடி ரூபாயும், ‘மாநாடு’ 8 கோடி ரூபாயும், ‘டாக்டர் 7 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் 5 இடங்களில் இருக்கின்றன. சில தியேட்டர்கள்‘மாநாடு’ படத்தின் காட்சிகளை அதிகரித்துள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.