விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை டாட்டூ குத்திய சண்முகப்பாண்டியன்!

விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை டாட்டூ குத்திய சண்முகப்பாண்டியன்!
விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை டாட்டூ குத்திய சண்முகப்பாண்டியன்!

விஜயகாந்தின் ஆக்ரோஷக் கண்களை அப்படியே தனது வலதுகையில் பச்சைக்குத்தியுள்ளார் அவர் மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன்.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன். ’சகாப்தம்’, ’மதுரவீரன்’ படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர் இப்போது அடுத்த பட வேலைகளில் இருக்கிறார். இந்நிலையில், விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவையை பாராட்டி காஞ்சிபுரத்தில் விழா நடந்தது. இதில் சண்முகப்பாண்டியன் கலந்துகொள்ளவில்லை. லண்டனில் இருந்ததால் இந்த விழாவுக்கு அவர் வரவில்லை. லண்டனில், விஜயகாந்தின் ஆக்ரோஷ கண்களை அவர் தனது வலதுகையில் பச்சைக்குத்திக் கொண்டார்.

தற்போது சென்னை திரும்பியுள்ள அவர், தன் தந்தையிடம் பச்சைக்குத்தியை கைகளை காண்பித்தார். பின்னர் அவரது 40 வருட கலைச்சேவைக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் அவரிடம் ஆசியும் பெற்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com