கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்த நடிகர் பிரஷாந்த்

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்த நடிகர் பிரஷாந்த்
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்த நடிகர் பிரஷாந்த்

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் பிரஷாந்த்தும் அவரது தந்தை இயக்குநர் தியாகராஜனும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமா துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தை இயக்குநர் தியாகராஜனும் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நிதி அளித்த  அவர்கள், ”முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று முதல்வர் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com