“உடல்மொழியும் பேச்சுத்திமிரும் வக்கிரம்; வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை!” - பொன்வண்ணன் காட்டம்!

பருத்திவீரன் திரைப்படம் விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணன், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பொன்வண்ணன் கண்டனம்
பொன்வண்ணன் கண்டனம்முகநூல்

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணன், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பொன்வண்ணன் கண்டனம்
EXCLUSIVE | “திருடன் நீதிமன்றம் செல்லமாட்டான்; பாதிக்கப்பட்டவன்தான் செல்வான்” - இயக்குநர் அமீர்

முன்னதாக நேற்று முன்தினம் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி அறிக்கையொன்று வெளியிட்டார். அதில் அவர், “அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான்... எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும்.... ஆறு மாசம் பருத்திவீரன் படப்பிடிப்பிலே இருந்துருக்கேன்.

ஆனா உங்கள ஒருநாள்‌ கூட அங்க பாத்தது இல்ல. நான்தான்‌ தயாரிப்பாளர்‌, நான்தான்‌ தயாரிப்பாளர்னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர்‌ ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன்‌. எந்த நன்றி விஸ்வாசமும்‌ இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர்‌. தப்பில்லையா ?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
பொன்வண்ணன் கண்டனம்
“இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்” - கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா.. சுதா கொங்கரா திடீர் பதிவு

எங்‌கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்‌?

பருத்திவீரன் விவகாரத்தில் ஞானவேல்ராஜாவுக்கு சமுத்திரக்கனி கேள்வி

பருத்திவீரன்‌ சம்பந்தமான பிரச்சினைகள்‌ வரும்போதெல்லாம்‌ சரி நமக்கெதுக்கு, அவங்களே பேசிக்குவாங்க... அவங்களே தீத்துக்குவாங்க, அப்படின்னுதான்‌ நான்‌ இருந்தேன்‌. ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அண்ணன்‌ இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார்‌. எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார்‌னு எனக்குதான்‌ தெரியும்‌. 

அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும், அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்படி வாங்கிட்டு வந்தவன் நான்.. இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு...” என்று தெரிவித்திருந்தார்.

அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும், என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறததான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல” - சமுத்திரக்கனி

முன்னதாக இயக்குநர் சசிகுமார் இது குறித்து தெரிவிக்கையில், "அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் பொன்வண்ணனும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இன்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பருத்திவீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப் பார்த்தேன்!

பொன்வண்ணன்
பொன்வண்ணன்

அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.

நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங்... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

இதனால்தான் பணத்துக்காக தனது படைப்பிற்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்றும் நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த 'தேசிய விருது' அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயர்ந்தது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டிற்கு பின்பும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை கூறுவதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக.. திருடன், வேலைதெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..!

பொன்வண்ணன் கண்டனம்
“இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்” - கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா.. சுதா கொங்கரா திடீர் பதிவு

அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது..!

பொன்வண்ணன்

தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து' திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்கும்மிடையே இருந்த நட்பு,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்..” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com