தந்தை பிறந்தநாள்: ஒரு கிராமத்திற்கே சொந்த செலவில் தடுப்பூசி வழங்கிய நடிகர் மகேஷ் பாபு
தனது சொந்த செலவில் ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
கொரோனாவை வெல்லும் பேராயுதமாக மருத்துவர்களால் தடுப்பூசி முன்வைக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்களிடம் தொடர்ந்து வரும் சூழலில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள். சமீபத்தில்தான் தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இன்று அவரது அப்பாவும் நடிகருமான கிருஷ்ணாவின் 78 வது பிறந்தநாள். அதனைக் கொண்டாடும் விதமாக, மகேஷ் பாபு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார்.
அந்த கிராம மக்களும் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்னர். இதனை, பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ் பாபுவும் ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே, நடிகர் மகேஷ்பாபு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் கிராமங்களைத் தத்தெடுத்து புதுப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்க்கது.