"வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளேன்: போலி அரசியலை புறந்தள்ளிவிட்டேன்”- கருணாஸ்

"வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளேன்: போலி அரசியலை புறந்தள்ளிவிட்டேன்”- கருணாஸ்
"வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளேன்: போலி அரசியலை புறந்தள்ளிவிட்டேன்”- கருணாஸ்

நடிகர் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘வாடிவாசல்’ படத்தில் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.

பாடகர், நகைச்சுவை நடிகர், நடிகர், அரசியல்வாதி என பல திறமைகளை வெளிப்படுத்திய இயக்குநர் கருணாஸ் உதவி இயக்குநராகவும் இயங்கவுள்ளார். தற்போது, ‘ஆதார்’ படத்தில் நாயகனாக நடித்துவரும் கருணாஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் முதல் பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படம் முடிந்தபிறகு ‘வாடிவாசல்’ படத்தில் இணைகிறார். இந்த நிலையில், கருணாஸ் உதவி இயக்குநராக தன் பயணத்தை துவங்கியுள்ளார். இதுகுறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள கருணாஸ்,

”கிராமிய கானா பாடகராக என் கலைவாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய் மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவதில் பெருமை கொள்கிறேன். போலி வியாபரா அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பி இருக்கிறேன். எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடி வாசலே வாசல் திறந்துவிட்டிருக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com