ரூ.10 ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கும் நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம்

ரூ.10 ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கும் நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம்
ரூ.10 ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கும் நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம்

ரூ.10 ரூபாய்க்கு உணவு வழங்கி வருகிறது நடிகர் ’கார்த்தி மக்கள் நல மன்றம்’.

நடிகர் கார்த்தி நடிப்பதோடு மட்டுமல்லாமல் நிஜத்திலும் சில சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘உழவன் ஃபவுண்டேஷன்’ ஆரம்பித்து குளங்களை தூர்வாரி சீரமைப்பதோடு விவசாயிளுக்கு பல்வேறு உதவிகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவரின் வழிகாட்டுதலின்படி அவரது ரசிகளும் சமூகத்திற்கு உதவி வருகிறார்கள்.

‘கார்த்தி மக்கள் நல மன்றம்’ மூலம் சென்னை வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் வண்டிக்கடை அமைத்து தரமான உணவு வழங்கி வருகிறார்கள். அதுவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் 50 ரூபாய் மதிப்புள்ள உணவை 10 ரூபாய்க்கு வழங்குகிறார்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இந்த உணவகம் கடந்த 150 நாட்களாக செயல்பட்டு வருகிறது. தினமும் 100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள். லாப நோக்கம் எதுவுமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் கார்த்தியின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com