”கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை”: வைரலாகும் கடிதம்

”கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை”: வைரலாகும் கடிதம்
”கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை”: வைரலாகும் கடிதம்

சென்னை காவல் அருங்காட்சியகத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ள கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது.

கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியானது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது.

இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் அக்டோபர் 26, 27 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்த கடந்த 20 ஆம் தேதி படக்குழு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, கமிஷ்னர் அலுவலகம் கொரோனா விதிமுறைகளைக்கூறி அனுமதி மறுத்துள்ளது”. இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com