நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘குருப்’: தமிழிலும் வெளியீடு

நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘குருப்’: தமிழிலும் வெளியீடு

நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘குருப்’: தமிழிலும் வெளியீடு
Published on

துல்கர் சல்மானின் ‘குருப்’ திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு ’குருப்’, ‘ஹே சினாமிகா’, ‘சல்யூட்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படம், செளபின் சாகிரின் புதிய படம் என நடித்து வருகிறார் துல்கர்.

இந்த நிலையில், கேரளாவையே கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் ‘குருப்’ வரும் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. முன்பு, தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடியில் வெளியாகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது கேரள அரசு. இதனால், உற்சாகமுடன் அதிகாரபூர்வமாக தியேட்டர்களில் ‘குருப்’ வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறது படக்குழு. 

துல்கர் சல்மானே நடித்து தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் ‘குருப்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com