”கர்ணன் வருவான்; சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” - தனுஷ் நெகிழ்ச்சி!

”கர்ணன் வருவான்; சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” - தனுஷ் நெகிழ்ச்சி!
”கர்ணன் வருவான்; சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” - தனுஷ் நெகிழ்ச்சி!

’தி கிரே மேன்’ படப்பிடிப்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் தனுஷ் இன்று நடந்த தனது ’கர்ணன்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாததால் நெகிழ்ச்சியுடன் நன்றி அறிக்கை ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பி இருக்கிறார். அதில்,

“உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா மனிதனா நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும் அவரோட மனிதநேயமும் தினந்தினம் ஒரு சர்ப்ரைசாக இருந்தது. மாரி மாதிரி ஒரு நல்ல மனிதநேயனா இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னை உங்க கர்ணனா மாத்துனதுக்கும் என் லைஃப்ல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டிருக்கு.

என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதையையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. கர்ணன் உங்க எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” என்று படத்தில் பணியாற்றிய சக நடிகர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் சேர்த்து நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com