ஹைதராபாத்தில் தொடங்கிய பிரபாஸ் -ஸ்ருதி ஹாசனின் ‘சலார்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் தொடங்கிய பிரபாஸ் -ஸ்ருதி ஹாசனின் ‘சலார்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு
ஹைதராபாத்தில் தொடங்கிய பிரபாஸ் -ஸ்ருதி ஹாசனின் ‘சலார்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் ‘சலார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் பிரபாஸ் ’கேஜிஎஃப்’இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்பு, கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் ‘சலார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், பிரபாஸ் - பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் காட்சிகள் எடுக்கப்பட்டன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து சிறிய இடைவெளி விட்ட நிலையில், இன்று முதல் ஹைதராபாத்தில் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், பிரபாஸ் கலந்துகொண்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் ’சலார்’ படம் தெலுங்கு மொழி மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com