போதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா

போதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா
போதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மதுஅருந்தும் போது தனது நண்பருடன் பாபி சிம்ஹா கைகலப்பில் ஈடுபட்டார்.

தற்போது உள்ள இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபி சிம்ஹா. இவர் நடித்த படங்களில், ‘ஜிகிர்தண்டா’ படத்தில் சிம்ஹா நடித்த ‘சேது’ என்ற கதாபாத்திரம் பிரபலம் வாய்ந்தது. இவர் விடுமுறை தினங்களில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வலம் வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று சென்னை, ஈக்காட்டுத்தாங்களில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு தனது நண்பர்களுடன் சிம்ஹா வந்துள்ளார். அவர்கள் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருக்கும்போது, சிம்ஹாவிற்கும் அவரது நண்பரான ஜி.கே.கருணாவிற்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து ஒருவக்கொருவர் விடுதியிலேயே தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, அசம்பாவிதத்தை தடுக்க விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தகராறில் ஈடுபட்ட சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்துள்ளனர். அத்துடன் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்கக்கூடாது எனக்கூறி, வழக்கப்பதிவு செய்யாமல் மன்னித்து அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com