‘சண்டிவீரன்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் அதர்வா முரளி - தஞ்சையில் படப்பிடிப்பு தொடக்கம்

‘சண்டிவீரன்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் அதர்வா முரளி - தஞ்சையில் படப்பிடிப்பு தொடக்கம்
‘சண்டிவீரன்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் அதர்வா முரளி  - தஞ்சையில் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் சற்குணம் - அதர்வா முரளி இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

'களவாணி’, 'வாகை சூடவா' என மக்களின் கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் மீண்டும் அதர்வா முரளியுடன் இணைந்திருக்கிறார். குடும்பப்படமாக எடுக்கப்படும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே, அதர்வா முரளியுடன் ‘சண்டிவீரன்’ படத்தில் இணைந்திருந்தார் இயக்குநர் சற்குணம். இப்படம் ஹிட் அடித்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ராஜ்கிரண், ராதிகா, ஆஷிகா ரங்கநாத், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சையில் தொடங்கியுள்ளது. ஒரேகட்டமாக 50 நாட்களில் மொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com