அமைச்சருக்கு அர்விந்த் சாமி சொன்ன பதில்

அமைச்சருக்கு அர்விந்த் சாமி சொன்ன பதில்
அமைச்சருக்கு அர்விந்த் சாமி சொன்ன பதில்

அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி மூலம் கொடுக்கப்படும் தொல்லைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ட்வீட்டுக்கு நடிகர் அர்விந்த் சாமி பதிலளித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி எண் பரவியது. இதனால், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில் தங்களது கருத்துகளைக் எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்க பல்வேறு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தனது வருத்தத்தை ட்விட்டர் மூலம் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், கடந்த 48 மணி நேரமாக தொலைபேசி அழைப்புகள் வாயிலாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த பதிவுக்கு ட்விட்டர் மூலமாக நடிகர் அர்விந்த் சாமி அளித்துள்ள பதிவில், இதுபோன்ற அசாதாரண சூழலில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவர். அது எந்த கருத்தாக இருந்தாலும் அதன்படி நீங்கள் நடந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையின்படி உங்களிடம் கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com