என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் ஆரி புகார்

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் ஆரி புகார்
என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் ஆரி புகார்

தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை கோரி நடிகர் ஆரி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயக்குநர் ஜெகதீஷ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இங்கிலீஷ் படத்தின் இசையமைப்பாளர் எம் சி ரிக்கோ என்பவர் புதியதாக எடுக்க உள்ள படத்தில் நான் நடிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேவை என போலியாக விளம்பரப்படுத்தி உள்ளார். அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த விளம்பரம் தவறானது. மேலும் அவர் வாய்ப்பு தேடி வருபவர்களிடம் பணத்தை பறித்தும், துணை நடிகைகளிடம் தவறாக பேசி வருவதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது.  இந்த நபர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சங்கத்திலும், இயக்குநர் சங்கத்திலும் ஏற்கெனவே புகார் அளித்துள்ளேன் என்று புகாரில் ஆரி தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் ஆரியின் புகார் குறித்து இங்கிலீஷ் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் குறிப்பிடும் நபருக்கும் தங்களுக்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்களும் மறுத்துள்ளனர். 

இதற்கு பதிலளித்துள்ள ஆரி, 'ஜெகதீஷ்' என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்.. ஜெகதீஷ் என்பவர் 'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்  திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் 'இங்கிலிஷ் படம்' போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன். மற்றபடி  'இங்கிலிஷ் படம்'  படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும்  தயாரிப்பாளர்  உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்தப் புகாரில் தொடர்பில்லை. இது குறித்து என் பெயரையும், 'இங்கிலிஷ் படம்' படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த 'ஜெகதீஷ்' என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது என்று தனது தரப்புக்கான விளக்கத்தை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com