ஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு!

ஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு!

ஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு!
Published on

ஆஸ்கர் விருது பிரிவுகளில் புதிதாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இருந்து இந்த புதிய பிரிவிலும் விருதுகள் வழங்கப் படும்.

ஹாலிவுட் சினிமாவின் முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது விழா. இதில் விருது பெறுவது ஹாலிவுட் நடிகர்களுக்கு பெரிய கவுரவம்.  தமிழரான ஏ.ஆர்.ரகுமான், ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என இந்த விருது 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டு அனிமேஷன் படங்களுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு பிரிவை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆஸ்கர் நிர்வாகம் அறிவித் துள்ளது. 

அதன்படி 'சாதனை படைத்த சிறந்த பிரபலமான திரைப்படம்’ (Outstanding Achievement in Popular Film) என்ற பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி உலகம் முழுவதும் பிரபலமடைந்த படத்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதனுடன் மேலும் சில மாற்றங்களையும் கொண்டு வர இருப்பதாகவும் ஆஸ்கர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com