மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் ஜோடி மீண்டும் இணைய உள்ளது.
கார்த்தி, அதிதி நடித்திருந்த காற்று வெளியிடை படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கியிருந்தார் மணிரத்னம். இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்திப் படத்தை இயக்க இருக்கிறார் மணிரத்னம். இதில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே மணிரத்னத்தின் குரு, ராவண் படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.