கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினம்: சொந்த ஊரில் உற்சாக கொண்டாட்டம்

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினம்: சொந்த ஊரில் உற்சாக கொண்டாட்டம்
கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினம்: சொந்த ஊரில் உற்சாக கொண்டாட்டம்

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினத்தையொட்டி அவரது சொந்த ஊரில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் சினிமா உலகில் புரட்சியை ஏற்படுத்தி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சீர்திருத்தவாதி கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன், சமூக சீர்திருத்த கருத்துக்களை நகைச்சுவையாக பொதுமக்களிடையே கொண்டு சென்றவர். பகுத்தறிவு விழிப்புணர்வை ஏற்படுத்திய கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் அவரது குடும்பத்தினர், பேரப்பிள்ளைகள் என பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com