‘ரஜினிகாந்த்166’ ஷூட்டிங் மார்ச்சில் ஆரம்பம்?

‘ரஜினிகாந்த்166’ ஷூட்டிங் மார்ச்சில் ஆரம்பம்?
‘ரஜினிகாந்த்166’ ஷூட்டிங் மார்ச்சில் ஆரம்பம்?

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஜினிகாந்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

புது வருஷத்தில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. அதையொட்டி அவர் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனையடுத்தாவது ரஜினி அரசியலில் குதிப்பார் என பலரும் செய்திகள் பரப்பி வருகின்றனர். அவரும் தனது ரஜினி மக்கள் மன்றத்தை முழுமையாக கட்டமைக்கும் வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘பேட்ட’தான் ரஜினியின் திரை வாழ்க்கைக்கு ஒரு விடையளிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்த்திருக்கும் வேளையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனையும் லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்து வருகிறது.

பலரின் எதிர்ப்பார்பை போலவே ‘2.0’ திரைப்படம் வெளியாகிவிட்டதால் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறது ரஜினியின் வட்டம். இதற்கான அறிவிப்பு வெளியான கையோடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பார். ஆகவே, அவர் திரும்ப திரை வாழ்கைக்கே முக்கியத்துவம் கொடுக்க இருப்பதால் அவரது அரசியல் பிரவேசம் புதிய ஆண்டில் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் ஏ.ஆர். முருகதாஸின் படத்தில் நடிக்க உள்ளதால் அந்தப் படத்தின் கதைக்களம் ரஜினியின் அரசியல் பயணத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ பல அரசியல் பிரச்னைகளை சந்தித்திருக்கும் வேளையில், ரஜினியின் படத்தில் மேலும் சில பாய்ச்சலை முருகதாஸ் செய்வார் என்றும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இதுவரை இப்படம் சம்பந்தமாக எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.  

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள திரைப்படம் அவரது 166வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com