சினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை!

சினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை!
சினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை!

’பேரன்பு’ படத்தில் நடித்திருந்த திருநங்கை அஞ்சலி அமீரின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடித்திருந்த படம் ’பேரன்பு’. ரசிகர்களால் கவனிக்கப்பட்ட இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் அவரது வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. திருநங்கை மாடல் ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் சினிமாவில் நடிப்பதுபோல கதை அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் பிரச்னைகளையும் இந்தப் படம் பேசும் எனத் தெரிகிறது. படத்தை டினே ஜார்ஜ் என்பவர் இயக்குகிறார்.

இதுபற்றி அஞ்சலி அமீர் கூறும்போது, ‘’எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன். அடுத்த வருடம் மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com