’காஞ்சனா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணையும் சரத்குமார்!

’காஞ்சனா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணையும் சரத்குமார்!
’காஞ்சனா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணையும் சரத்குமார்!

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை ‘லஷ்மி’யாக இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார்.  சமீபத்தில்தான் இப்படம் வெளியானது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ருத்ரன்’ என்று வெளியானது. ஜி,வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குகிறார். பிரியா பவானி ஷங்கர் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ருத்ரன் படத்தில் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சனா படத்தில் லாரன்ஸ்-சரத்குமார் கூட்டணி ரசிகர்களை மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com