என்னிடம் மன்னிப்பு கேட்டார்; அதிர்ச்சியாக இருந்தது - ரஜினி குறித்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்

என்னிடம் மன்னிப்பு கேட்டார்; அதிர்ச்சியாக இருந்தது - ரஜினி குறித்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்
என்னிடம் மன்னிப்பு கேட்டார்; அதிர்ச்சியாக இருந்தது - ரஜினி குறித்து பேசிய  ஸ்டண்ட் மாஸ்டர்

 நடிகர் ரஜினி குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வியந்து பேசியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ரஜினி உடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ரஜினி சாரை முதன்முதலாக சிவாஜி பட ஷூட்டிங்கில்தான் பார்த்தேன். அப்போது அசிஸ்டண்ட்டாக இருந்தேன். அதிகம் சிரமப்படமால், சுலபமாக, அவருடைய ஸ்டைலில் சண்டைக் காட்சிகளை செய்வார். திரையில் அசாதாரணமாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். பெரிய ஸ்டாராக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களுக்கு முதல் கைதட்டல் அவரிடமிருந்துதான் வரும்.

2.0 படத்தில் நான் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தேன். சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பின்போது, அவருடைய முழங்காலில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். சங்கர் சாரும் முதலில் மருத்துவமனைக்குப் போகச் சொன்னார். ஆனால அவர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போகலாம் எனக் கூறிவிட்டார். பிறகு மருத்துவமனைக்குச் சென்று இரண்டு மூன்று தையல்கள் போடும்படி இருந்தது.

மீண்டும் ஷூட்டிங் வந்த ரஜினி சார் என்னை அழைத்து, நான் மருத்துவமனைக்கு செல்லச்சொன்னதை கேட்காததற்கு மன்னிப்பு கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த பெரிய நட்சத்திரம் இதை செய்வார்கள்? அவருடைய இரக்ககுணமும், கருணை குணமும்தான் அவரை தனித்து நிற்கச் செய்திருக்கிறது. அவரைப்போல் ஒருவரைப் பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com