’சுல்தான்’ கதை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது: நடிகர் கார்த்தி

’சுல்தான்’ கதை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது: நடிகர் கார்த்தி
’சுல்தான்’ கதை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது: நடிகர் கார்த்தி

தனது ‘சுல்தான்’ படத்தில் பணியாற்றிய படக்குழுவினரின் படத்தை பகிர்ந்து உற்சாகமுடன் முழு அணிக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் கார்த்தி.

கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்கள். இவர், நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது, லோகேஷ் கனகராஜின் கைதி, ஜீத்து ஜோசப்பின் தம்பி ஆகிய படங்களில் நடித்துகொண்டிருந்தால், படப்பிடிப்பு தாமதமாகி மீண்டும் துவக்கப்பட்டது. ’சுல்தான்’ என்று பெயரிட்டுள்ளதால் திப்பு சுல்தானின் வாழ்க்கை கதை என்று பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

சமீபத்தில்தான், இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். பிரபு சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்தது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை நாங்கள் கேட்டநாள் முதல் இன்று வரை, இந்தக் கதை தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதுவரை வெளியான எனது படங்களில் இதுவும் பிரம்மாண்ட தயாரிப்பு படம். கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறந்த உழைப்பை வழங்கிய முழு அணிக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com