‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா!

‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா!
‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா!

தமிழ் திரைப்படங்களில் ஜில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், காதலும் கடந்துபோகும், இறைவி மற்றும் தானா சேர்ந்த கூட்டம்
போன்ற பல தயாரித்துள்ளவர் ஞானவேல் ராஜா. இவரது ஸ்டுடியோ கீரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் பிரபலமான ஒன்று தான்.
இந்நிலையில் தமிழ் திரையுலக நடிகர்களை ஞானவேல் ராஜா திரைப்பட நிகழ்ச்சி சாடியுள்ளார். 

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ’நா பேரு சூர்யா இல்லு இந்தியா’ என்ற படத்தின் தமிழ்மொழி மாற்ற அறிமுக விழாவில் பேசிய
ஞானவேல் ராஜா, “ஒரு ஹீரோவின் படம் ரூ.100 கோடி வசூல் செய்தால், அந்த ஹீரோ ரூ.50 சம்பளம் கேட்கிறார். ஆனால் தெலுங்கு
திரையுலகில் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்கள் அதிகபட்சம் ரூ.15 கோடி தான் சம்பளம் கேட்கின்றனர். தமிழ்த்
திரையுலகில் இதே நிலை இன்னும் ஒருவருடத்திற்கு தொடர்ந்தால், நான் தெலுங்கு திரையுலகிற்கே சென்றுவிடுவேன்’ என்று
கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com