மரத்தில் கட்டப்பட்ட ஸ்கார்பியோ கார்: கருத்து தெரிவித்த மஹிந்திரா குழும தலைவர்.!
சங்கிலியைக் கொண்டு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரின் புகைப்படத்தை, டிவிட்டரில் பகிர்ந்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா “ இந்த படம் லாக்டவுனில் உள்ள தற்போதைய எனது மனநிலையை உணர்த்துகிறது” என தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் சங்கிலி மூலமாக மரத்தில் கட்டப்பட்டுள்ளதை காட்டுகிறது.
இந்த படம் குறித்து அந்த டிவிட்டர் பதிவில் எழுதியுள்ள அவர் “ உயர் தொழில்நுட்ப பொதுமுடக்கம் என்பது சரியான தீர்வு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இது உரிமையாளரின் தன்உரிமையை காட்டுகிறது. என்னைப்பொறுத்தவரை இந்த படம் பொதுமுடக்கத்தின்கீழ் நான் எப்படி உணர்கிறேன் என்பதை காட்டுகிறது. இந்த வார இறுதியில் நான் இந்த சங்கிலியை உடைக்க முயற்சிக்க போகிறேன்( எனது முகக்கவசத்துடன்)” என தெரிவித்துள்ளார்.