31 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம் விலை

31 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம் விலை
31 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம் விலை

3 நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது.

ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் தங்கம் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்து 31,168 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896க்கு விற்பனையாகிறது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.30 உயந்து ரூ. 52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com