கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா பெற்ற நேரடி அந்நிய முதலீடு எவ்வளவு? - மத்திய அரசு விளக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா பெற்ற நேரடி அந்நிய முதலீடு எவ்வளவு? - மத்திய அரசு விளக்கம்
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா பெற்ற நேரடி அந்நிய முதலீடு எவ்வளவு? - மத்திய அரசு விளக்கம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெற்றுள்ள நேரடி அந்நிய முதலீடு எவ்வளவு என்ற விவரத்தை அரசு அறிவித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் மூலம் இது தெரியவந்துள்ளது. 

2014-15இல் 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய முதலீடு 2020-21இல் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு குறித்த விவரமும் ஆண்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 

2016-17இல் 60.22 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2017-18இல் 60.97 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2018-19இல் 62.00 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2019-20இல் 74.39 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2020-21 இல் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து ஆண்டுகளையும் சேர்த்து மொத்தமாக பெற்றுள்ள முதலீடு 339.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதற்கு காரணம் அரசின் எளிய கொள்கை முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source: PIB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com