பங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்

பங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்
பங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்

இந்திய பங்குசந்தைகள் மதிப்பீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 396 புள்ளிகள் அல்லது 1.03%
உயர்ந்து 38,989.74 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் மதிப்பீட்டில் வேதாந்தா நிறுவனம் அதிகபட்சமாக 7% வளர்ச்சியும், எஸ்
வங்கி அதிகபட்சமாக 5% சரிவையும் சந்தித்தன. 

தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 133 புள்ளிகள் அல்லது 1.22% அதிகரித்து 11,573.30 புள்ளிகளுடன் முடிவடைந்தது. கடந்த சில
நாட்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்தார். அதன்பின்னர்
தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே நேற்று சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com