"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்

"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்

"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்
Published on

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. 

வங்கி பரிவர்த்தணைக்காக வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நீண்ட தூரம் பயணித்து அல்லல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு சான்று பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்க வேண்டும் என 2017ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள 70 வயதுக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதற்காக வங்கிச் பரிவத்தனைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கிச் சாரா பரிவர்த்தனைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

வீட்டுக்கே சென்று சேவை வழங்குவது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், இந்த முறையால் வங்கிகளிலும் கூட்டம் குறைய வாய்ப்புள்ளதாகவும் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com