இந்தியாவில் உற்பத்தியை துவங்க உள்ள சாம்சங் செல்போன் நிறுவனம்?

இந்தியாவில் உற்பத்தியை துவங்க உள்ள சாம்சங் செல்போன் நிறுவனம்?

இந்தியாவில் உற்பத்தியை துவங்க உள்ள சாம்சங் செல்போன் நிறுவனம்?
Published on

செல்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான சாம்சங் தனது உற்பத்தியை விரைவில் இந்தியாவில் துவங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பி.எல்.ஐ (உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம்) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சாம்சங், பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை உற்பத்தி செய்ய இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன.  இதன் மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யும்’ என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

அதை உறுதி செய்யும் வகையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வணிக செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதும், ஏற்றுமதி உட்பட இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுமே சாம்சங் இந்தியாவில் தனது உற்பத்தியை துவங்க காரணமாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான இறுதிக்கட்ட பணிகளை சாம்சங் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வியட்நாம், பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com