\
மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்குகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்குகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்குகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!
Published on

மின்சார வாகன உற்பத்தியில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடவுள்ளது.

பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் மின்சார வாகன பிரிவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்துள்ளார்.

“மின்சார வாகனம் குறித்த பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. நிறுவனத்திற்கு சில யோசனைகள் இருக்கின்றன. முதல் மின்சார வாகனத்தை வடிவமைப்பதற்கு நிறைய வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் நிறுவனம் எளிதான வழியை எடுக்காது. முதல் வாகனத்தை சிறந்த வாகனமாக வெளியிடுவதே எங்கள் நோக்கம். எனவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வெளியாவதற்கு சிறிது காலம் ஆகும் என்று சித்தார்தா லால் கூறினார். இதனால், ராயல் என்பீல்டு பெயரில் முதல் மின்சார வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com