“மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது” - ஆர்பிஐ

“மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது” - ஆர்பிஐ
“மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது” - ஆர்பிஐ

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 4% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 4% ஆக தொடரும். ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றமில்லை. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3%ஆக தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதங்கள் முதல் உயரத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கிவிட்டது. அதிகரித்து வரும் கொரோனாவால் அடுத்தடுத்து பொதுமுடக்கங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com