கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக, தற்போது தக்காளியின் வரத்து, குறைவாக இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 45 வாகனங்களில் மட்டுமே தற்போது தக்காளி வரத்து இருப்பதாகவும், இது சென்னையின் தேவையை பூர்த்தி செய்யாது எனவும் தெரிவிக்கின்றனர்.