உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் ?

உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் ?

உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் ?
Published on

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 27 காசுகள் விலை உயர்ந்து 75 ரூபாய் 26 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் விலை அதிகரித்து 69 ரூபாய் 57 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நேற்று முன் தினம் கச்சா எண்ணை விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்ததே இவற்றின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. 

இருப்பினும், நேற்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 6 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு காரணங்களால் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com