ஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு

ஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு

ஆதாருடன் 14 கோடி பான் எண்கள் இணைப்பு
Published on

14 கோடி பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய பான் - ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதையடுத்து பான் எண்ணை, ஆதாருடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது இந்த அவகாசம், மார்ச் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பான் எண்களில் 41 சதவிகிதம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com