$5 டிரில்லியன் மதிப்பை கடந்த இந்திய பங்கு சந்தை , முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட New age கம்பெனிகள் அனைத்தும் அதிக மதிப்பில் இருக்கிறது
5 Trillion dollar economy
5 Trillion dollar economyShare Market

இந்திய பங்கு சந்தை முதன்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் இடையே $5 டிரில்லியன் மார்க்கெட் கேப்பிடலை கடந்துள்ளது. இது $4 ட்ரில்லியனில் இருந்து வர எடுத்துக்கொண்ட காலம் வெறும் ஆறு மாதம் மட்டுமே, சரியாக சொல்வதென்றால் 117 நாட்கள். தேர்தல் பயம், அமெரிக்க வட்டி விகித பிரச்னை & உலக நாடுகளிடையே நிலவும் சண்டைகளுக்கு மத்தியில் இந்திய பங்கு சந்தைகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மதிப்பை கடந்து உள்ளன.  

இதன் மூலம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற $5 டிரில்லியனுக்கும் மேற்பட்ட மார்க்கெட் கேப்பிடல் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்திய பங்கு சந்தையும் இணைத்துள்ளது.

  • இந்த உயர்வின் மூலம் ஒட்டுமொத்த உலக மார்க்கெட் கேப்பிடலில் இந்தியாவின் பங்கு 4.19% ஆக உயர்ந்து உள்ளது . 

  • இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மார்க்கெட் கேப்பிடல் 11.5% வளர்ச்சி அடைந்து உள்ளது .

இந்த வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றிய 5 நிறுவனங்களாக RIL , SBI, LIC, Airtel & Hindustan Zinc உள்ளன.    

Marketcap to GDP ratio:

இந்தியாவின் மார்க்கெட் கேப்பிடல் -மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Marketcap to GDP ratio) 15 ஆண்டுகளில் அதிகபட்சமாக 140.2% ஐ எட்டியுள்ளது, இது உலகளாவிய தரநிலைகளால் நிர்ணயிக்கப்பட்ட சிறந்த வரம்பை கணிசமாக மீறுகிறது. 

Forward PE மதிப்பு 50 ஐ கடந்த பங்குகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்து உள்ளது . முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர், குறிப்பாக சிறிய மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

நாம் இப்போது சந்தையின் உச்சத்தில் இருக்கிறோம், Margin of safety இப்போது குறைவாக உள்ளது . பங்குகள் எதுவும் மலிவாக இல்லை. அவை வளர்ச்சிக்கு தகுந்த நியாயமான விலையில் (Fair Price)  இல்லை . அதை விட அதிகமாகவோ வர்த்தகம் ஆகிறது.
HDFC Securities நிறுவனத்தின் Deepak Jasani

பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட New age கம்பெனிகள் அனைத்தும் அதிக மதிப்பில் இருப்பதாக அவர் கூறுகிறார் . சிறு முதலீட்டாளர்கள் இவற்றில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும் .

அதே நேரத்தில் மதிப்பு உச்சத்தில் இருந்தாலும் இந்த சந்தையிலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 12-15% வருமானத்தை எதிர்பார்க்கலாம் என Mirae Asset நிறுவனத்தின் Surana கூறுகிறார் . அவருடைய பார்வையில் சில தனியார் வங்கிகள் , பார்மா, consumption & ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் கம்பெனிகள் கவர்ச்சிகர மதிப்பில் உள்ளதாக கூறுகிறார் . 

முதலீட்டாளர்கள் மொத்தமாக முதலீடு செய்யாமல் SIP முறையில் மல்டி கேப் & hybrid fund களில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகிறார்.

குறிப்பு: முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள் .  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com