மானிய சிலிண்டர் விலை ரூ.32 உயர்வு

மானிய சிலிண்டர் விலை ரூ.32 உயர்வு

மானிய சிலிண்டர் விலை ரூ.32 உயர்வு
Published on

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 32 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

இதையடுத்து மானிய சிலிண்டரின் விலை சென்னையில் 31 ரூபாய் 41 காசு அதிகரித்து 466 ரூபாயாக விற்கப்படுகிறது. மானிய சிலிண்டர் விலை இவ்வளவு அதிகரிக்கப்படுவது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. ஜிஎஸ்டியில் மானிய சிலிண்டருக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதோடு சர்வதேச சந்தை விலை நிலவரமும் கணக்கிடப்பட்டு 32 ரூபாய் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையில் மானியத்துடன் கூடிய சிலிண்டருக்கு விதிக்கப்பட்ட 5  சதவிகித ஜிஎஸ்டி வரியை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com