அலைக்கற்றைக்கான முன்பணத்தை செலுத்திய ஜியோ, ஏர்டெல்!

அலைக்கற்றைக்கான முன்பணத்தை செலுத்திய ஜியோ, ஏர்டெல்!
அலைக்கற்றைக்கான முன்பணத்தை செலுத்திய ஜியோ, ஏர்டெல்!

அலைக்கற்றையை கையகப்படுத்தியதற்கான முன்பணத்தை ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் ஃவோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலைக்கற்றைகளை பெறுவதற்கான மத்திய அரசின் ஏலம் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது. இதில், பங்கேற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், முன்பணத்தை செலுத்த மார்ச் 18ஆம் தேதிவரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, 15 ஆயிரத்து 19 கோடி ரூபாயையும், பார்தி ஏர்டெல் 6 ஆயிரத்து 323 கோடி ரூபாயையும், வோடஃபோன் ஐடியா 574 கோடி ரூபாயையும் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அலைக்கற்றைக்கான முன்பணத்தை செலுத்திய ஜியோ, ஏர்டெல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com