இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் முதன்முறையாக 56 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து 41 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 681 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், ஹெச்.டி.எஃப்.சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிர்ட், எல் அண்டு டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்படுகின்றன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com