இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு
இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 534 புள்ளிகள் அதிகரித்து 59,299 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 159 புள்ளிகள் உயர்ந்து 17,691 புள்ளிகளில் முடிவடைந்தது.

வர்த்தகத்தின்போது என்.டி.பி.சி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், டெக் மஹிந்திரா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்குகளில் முதலீடு செய்ததே பங்குச் சந்தைகள் உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com