கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள அச்சத்தின் காரணமாக மாஸ்க் (முகக்கவசம்) தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ‘CeeMee’ என்ற நிறுவனம் டிரான்ஸ்பரண்ட் மாஸ்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாஸ்க் அணிந்துள்ளவரின் முழு முகமும் டிரான்ஸ்பரண்டாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்த மக்கள் எதிர்கொண்ட மற்றும் வெளிப்படையாக சொல்லி வந்த சிக்கல்களுக்கு இதில் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக CeeMee தெரிவித்துள்ளது.
லிப் ரீட் செய்ய, கண்ணாடி அணிந்தாலும் அது பூத்து போக செய்யாத (Fog) வகையிலும், ஸ்மார்ட் போனில் Face ஐடியை அன்-லாக் செய்ய என பல்வேறு பயன்களை இந்த மாஸ்க் தருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த மாஸ்க் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல். மொத்தத்தில் இந்த மாஸ்க் மூலம் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் தெளிவாக தெரியும்.
N98.4 தர டிஸ்போஸபிள் ஃபில்டர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. அமேசான் தளத்தில் இந்த மாஸ்க்கின் விலை 2990 ரூபாய்.