உயருகிறது ஹீரோ பைக்குகளின் விலை; சிறப்புச் சலுகையும் அறிவிப்பு!

உயருகிறது ஹீரோ பைக்குகளின் விலை; சிறப்புச் சலுகையும் அறிவிப்பு!
உயருகிறது ஹீரோ பைக்குகளின் விலை; சிறப்புச் சலுகையும் அறிவிப்பு!

மாருதி சுசூகி உள்ளிட்ட கார்களின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், இரு சக்கர வாகன சந்தையில் பெருமளவு சந்தையை வைத்திருக்கும் ஹீரோ நிறுவனமும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது.

மூலப்பொருள்களின் விலை உயருவதால், அதனை ஈடுகட்ட விலையை உயர்த்த வேண்டி இருக்கிறது என பங்குச்சந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் ஹீரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சுமார் ரூ.2500 வரை விலை உயர்வு இருக்கக் கூடும். ஆனால், இந்த விலை உயர்வு வாகனம் மற்றும் எந்த இடத்தில் வாங்குகிறோம் என்பதை பொறுத்து இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இனி, இதர இரு சக்கர வாகன நிறுவனங்களும் இந்த விலை உயர்வை அறிவிக்கக் கூடும். ஹீரோ நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்தினாலும், கூட நேற்றைய வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது,

ரூ.3,500 ஆஃபர்...

ஒருபுறம் விலையை உயர்த்தினாலும், மறுபுறம் ரூ.3,500-க்கு ஆஃபரையும் ஹிரோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. கடந்த ஜனவரியில் 10 கோடி வாகன விற்பனை என்னும் முக்கியமான மைல்கல்லை ஹிரோ நிறுவனம் எட்டியது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடியை வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

இந்தச் சலுகை ஸ்டாக் உள்ளவரை என்றும், மேலும் எந்த இடத்தில் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்தும் இந்த ஆபர் மாறுபடும். ஆனால், மொத்த ஆஃபர் ரூ.3,500 என நிறுவனம் அறிவித்திருக்கிறது. தவிர, ஆறு புதிய மாடல்களையும் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

கொரோனாவில் எப்படி இரண்டாம் அலை அச்சுறுத்தலோ, அதேபோல ஆட்டோமொபைல் துறையில் இரண்டாம் கட்ட விலையேற்றம் தொடங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com