செல்போனுக்கு பதிலாக‌ உப்பு: பிளிப்கார்ட் ஊழியர்கள் தில்லாலங்கடி

செல்போனுக்கு பதிலாக‌ உப்பு: பிளிப்கார்ட் ஊழியர்கள் தில்லாலங்கடி

செல்போனுக்கு பதிலாக‌ உப்பு: பிளிப்கார்ட் ஊழியர்கள் தில்லாலங்கடி
Published on

போலி முகவரி கொடுத்து விலையுயர்ந்த செல்போன்களை திருடி அதற்கு பதில் உப்பு பாக்கெட்டை கொடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய பிலிப்கார்ட் ஊழியர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். 
ஜெய்கணேஷ் மற்றும் சாம் திவாகர் ஆகியோர் என்பவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், போலியான முகவரிகள் கொடுத்து விலை உயர்ந்த செல்போன்களை ஆர்டர் செய்து அவற்றை வேறு நபர்களுக்கு விற்றிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் செல்போனை வாங்க மறுத்து திருப்பியனுப்பியதாக கூறி, செல்போன் பெட்டிக்குள் கல் உப்பை நிரப்பி இவர்கள் பிளிப்கார்ட்டுக்கு இவர்கள் அனுப்பியுள்ளனர். இந்தமோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவரையும் காவல்துறையினர்‌ தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com