ரூ.2-ல் வெலிடிட்டி நீட்டிப்பு பிளான் : பிஎஸ்என்எல் அறிவிப்பு

ரூ.2-ல் வெலிடிட்டி நீட்டிப்பு பிளான் : பிஎஸ்என்எல் அறிவிப்பு
ரூ.2-ல் வெலிடிட்டி நீட்டிப்பு பிளான் : பிஎஸ்என்எல் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2-ல் வெலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்களிடையே ஆஃபர்கள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு புதிய பிளான்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.2-ல் வெலிடிட்டி கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2-க்கு பிளானை தேர்வு செய்தால், ஒருவரின் வெலிடிட்டி காலம் முடிவடைந்த பின்னர், மேலும் மூன்று நாட்கள் வெலிடிட்டி நீட்டிப்பு வழங்கப்படும். அதற்கான ரூ.2 தொகை வெலிடிட்டி தொடங்கிய முதல் நாளில் வாடிக்கையாளர்களின் மெயின் பேலன்ஸில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். 

இந்த பிளான் வெலிடிட்டிக்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய மட்டும் என்றும், இதில் வேறு எந்த சலுகைகளும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னதாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.19 பிளானுக்கு பதிலாக இந்த புதிய பிளான் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரூ.19 பிளானின்படி, ஒரு மாதத்திற்கு வெலிடிட்டி நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com