இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி!

இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி!

இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி!
Published on

குஜராத் மற்றும் இமாச்சலில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற
இறக்கத்தை சந்தித்து வருகின்றன.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கடுமையான
போட்டிக்கு பிறகு முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அப்போது துவங்கிய இந்திய பங்குச்சந்தை முதலில் சரிவை சந்தித்தது. இதன்படி
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை சரிந்து 32,595 ஆகவும், நிப்டி 10,074 ஆகவும் இருந்தது.

அதன் பின்பு பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது. எனவே, மதியம் 12 மணி நிலவரப்படி பங்குச்சந்தையில் மீண்டும் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை 33,736 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நிப்டி 10,400 புள்ளிகளை தொட்டுள்ளது. மாலை வரை வர்த்தக்கத்தில்
தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு பங்குச்சந்தை உயரும் என்று முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com